Tuesday, October 10, 2006

" தீபங்களின்....விழா.... தீபாவளித் திருவிழா!
தாய்த் தமிழகத்தையே பார்த்திராத, உலகெங்கும்

திட்டுத்திட்டாய் சிதறி....நிரந்தர வாழ்விடமாய்க்
கொண்டு வாழ்ந்துவரும் சின்னஞ்சிறார்களுக்கும்,ஏன்?
வாலிப வயதினருக்கும் கூட சில பண்டிகைகளின் மரபுகள் தெரியாமலிருக்கும்!
எதோ, பண்டிகை வருகிறது. எண்ணெய் தேய்த்துக் குளிக்கிறோம். புத்தாடை உடுத்துகிறோம். வெடி வெடிக்கிறோம்! தடபுடலான விருந்துகளில் ஊரும் உறவும் திளைத்துக் கிடப்பதில் மகிழ்ந்து போகிற நாட்களாகத்தான்பண்டிகைகள் வந்து போவதாகக் கருதுபவர்கள் ஏராளம்!
இன்னும் சொல்லப்போனால் தீபாவளியா? பொங்கலா? ஏதோ ஒரு சனி ஞாயிறில் ஏதோ ஒரு அமைப்பில் அசோசியேசன் நடத்துகிற ஒரு சில மணித்துளி நிகழ்வில் போயமர்ந்து பலரும் கொண்டு வந்த விதவிதமான உணவு வகைகளைருசி பார்த்து விட்டு வரும் நாளாகத்தான் அமெரிக்காவில் வாழும் வாலிபவயதினரும் அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பதுதான் கசப்பானஉண்மை!
அங்கும் தமிழில் பேசுவோர் வெகு சொற்பம்; தீபாவளிக்குஇந்த சனிக்கிழமை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது என்பதையேநுனி நாக்கு ஆங்கிலத்தில் தமிழர்கள் இல்லத் தொலைபேசி குரல்அஞ்சலில் (Voice Mail) தெரிவித்திருப்பார்கள், தமிழ் அமைப்பைச் சேர்ந்தவர்கள்!தமிழ் அமைப்புகள், தமிழர்களின் இல்லங்களுக்கு தொடர்புகொண்டு பேசும்போதுகூட தமிழில் பேசத்தயங்குகிறார்கள் என்பது வேறு விசயம்.
இவ்வளவையும் மீறி, அந்தப் பண்டிகையின் சிறப்பையோ மூலத்தையோ சொல்லித் தர அந்த அமைப்புகளுக்கோ அல்லது பெரியவர்களுக்கோ நேரம் வாய்ப்பதில்லை!அப்படிப்பட்டவர்களுக்காக தீபாவளிப் பண்டிகையின் சிறப்புகளை சங்கமம் மூலம்இந்தக் கட்டுரையை அளிப்பதில் பெருமகிழ்ச்சியே! பண்டிகைகள்......!
வாழ்க்கையில் பலவித சோதனைகளும், இஇன்ப துன்பங்களும் மாறி மாறி வருவதால் பலருக்கும் வாழ்க்கை அலுத்துவிடுகிறது. தற்போதைய இஇளைஞர்களின் வார்த்தையில் கூறுவது என்றால் 'Bore அடிக்கிறது'. வழிநெடுக நடந்து களைத்துப் போனவன் தாகசாந்தி செய்து சற்றே இளைப்பாறுவதுபோலத்தான் வருடத்தில் சில மாதங்கள் தேர்... திருவிழா....பண்டிகைகள் என்று மனித குலம் குதூகலித்துக் கொள்கிறது!
இவ்விதம் வாழ்க்கையில் அலுப்புத் தட்டாமல் இஇருப்பதற்கும், அதே சமயத்தில் ஆன்மிகத்திலும், இறைபக்தியிலும் மனம் ஈடுபடுவதற்காகவுமே பல பண்டிகைகளை நமது ஆன்றோர்களும், சான்றோர்களும் நிர்ணயித்து உள்ளனர். அத்தகைய சிறப்பு மிகுந்த பண்டிகைகளில் ஒன்றே தீப - ஒளி என்ற தீபாவளி ஆகும்.
உலகெங்கும் உள்ள இந்துப் பெருமக்களால் கொண்டாடபடும் தீபங்களின் விழா... தீபாவளித் திருவிழா!
தீபாவளி என்றால் தீபம் + வளி ... வளி என்றால் வரிசை என்று பொருள். வரிசையாக தீபங்களை வைத்துக் கொண்டாடப்படுகிற பண்டிகையாக இருந்ததால் தீபாவளி என்ற காரணப் பெயராக நிலைத்துவிட்டது!
ஐப்பசியில் கொண்டாடப்படுகிற மிக முக்கியமான திருவிழா தீபாவளி.
ஐதீகமாகவும், தத்துவார்த்த ரீதியிலும் விளங்கும் தீபாவளியானது உலகின் பல பாகங்களில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தீமையை விலக்கும் உண்மையாகவும், இருளை விலக்கும் ஒளியாகவும் இந்த விழாவைச் சொல்றோம்.
இந்தியத் தத்துவ மரபில் ஒளி என்பது ஞானத்தின் குறியீடாகக் கருதப்படுகிறது. எனவே தீபாவளிப் பண்டிகையின் போது ஏற்றப்படும் எண்ணெய் விளக்குகள் மனிதனுக்கு ஞானத்தைக் கொண்டு வருவதாக ஐதீகம்.
வேத காலத்திலிருந்து கொண்டாடப்பட்டு வரும் இஇந்த விழாவானது மனிதர்களிடையே அன்பையும் நட்புறவையும், ஞானத்தையும் வலியுறுத்துகிறது.
பஞ்சாங்கங்களில் தீபாவளியன்று காலையில் "சந்திர தரிசனம் " என்றோ சந்திரோதயத்தின் போது கங்கா ஸ்நானம் செய்ய உத்தமம் என்றோ காணப்படும். "சந்திர தரிசனம்" என்றால் என்ன?
ஐப்பசி மாதத்தில் தேய்ப்பிறை பதினான்காம் நாளாகிய சதுர்த்தசியன்று சூரிய உதயத்திற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பாக பிறைச் சந்திரன் மெல்லியதொரு கீற்றாகத் தோன்றும்.இஇது கிழக்கில் அடிவானத்தில் தெரியும்.
சூரியன் உதயமாகிவரும் நேரத்தில் சூரிய ஒளியில் அது மங்கிப்போய் கண்ணுக்குப் புலப்பட மாட்டாது. ஆனாலும் கூட சூரிய உதயத்திற்கு முன்பு கவனமாகத் தேடிப்பார்த்தால் சுமார் 20 நிமிடங்களுக்கு சந்திரனைக் காண முடியும். மேகமூட்டமோ, மூடுபனியோ இஇல்லாது இருக்கவேண்டும்.
இந்த நேரத்தில் பூமியில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் ஆகாச கங்கை ஆர்ப்பரிக்கும். ஆகவே அந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். ஆகையால்தான் தீபாவளியன்று விடியுமுன் குளிப்பதை "கங்காஸ்நானம்" என்று கூறுகிறார்கள். கங்காஸ்நானம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்று ஆன்றோர் கூறுவார்கள்.
சூரியன் உதயமாவதற்கு முன்னர் பிறைச் சந்திரன் தோன்றும் வேளையில் பூமியில் உள்ள நீர்நிலைகளில் கங்காதேவி ஆவாஹனம் ஆவாள். அதே சமயத்தில் நல்லெண்ணெயில் மஹாலட்சுமியின் அம்சங்கள் தோன்றும். ஆகையால் அந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து கங்கா ஸ்நானம் செய்வார்கள். புத்தாடை அணிந்து மகிழ்வார்கள். தீபாவளியை ஒரு நாள் கொண்டாடுவோரும், நான்கு நாள், ஐந்து நாள் கொண்டாடுவோரும் உண்டு என்றாலும் அமெரிக்காவிலோ இஇல்லை கனடாவிலோ வார வேலை நாட்களில் வந்தால் அதாவது வியாழக்கிழமை தீபாவளி என்றாலும் அந்த வார இறுதி நாளான சனிக்கிழமையோ, ஞாயிற்றுக்கிழமையோ தான் கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தில் ஒருநாள் தீபாவளி கொண்டாடப்பட்டாலும் இஇந்தியாவின் சில மாநிலங்களில் அதாவது ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் தீபாவளி ஐந்து நாட்கள் என்ற அளவில் வெகு அமர்க்களமாகக் கொண்டாடப்படுகிறது. இஇந்துக்கள் மட்டுமின்றி ஜைன, பெளத்த சமயத்தைச் சார்ந்தவர்களும் சேர்ந்து கொண்டாடுகிற......
ஒரு உன்னதமான பண்டிகை தீபாவளி !
இந்தியத் தத்துவ மரபானது ஐந்தாயிரம் ஆண்டு பாரம்பரியத்தை உடையது. இஇந்த மரபில் தீபாவளி குறித்து ஏராளமான கதைகள் புழக்கத்தில் இஇருக்கிறது. தீபாவளியின் தோற்றம் குறித்த கதையாக நரகாசுரனைக் கிருஷ்ணனும், சத்தியபாமாவும் சேர்ந்து அழித்த கதைதான் எல்லோருக்கும் தெரிந்த ரகசியக் கதை. உங்கள்ல சிலருக்கு... இஇல்ல... உங்க குழந்தைகளுக்குக் கூடத் தெரியாம இருக்கலாம்.
நரகாசுரனைச் சத்தியபாமா வதம் புரிந்ததைத் தீபாவளியாகக் கொண்டாடுவதாகத் தமிழர்கள் நம்புகிறார்கள். இஇதற்குரிய கதை 'காளிகா புராண'த்திலும் வேறு சில புராணங்களிலும் உபகதையாகச் சொல்லப்பட்டுள்ளது. கிருஷ்ணன் சத்தியபாமா சம்பந்தப்பட்ட விழாவாக முழுக்க முழுக்க இஇருந்தால் இஇது வைணவ விழாவாகக் கருதப்பட்டிருக்கும். ராமநவமி, கோகுலாஷ்டமி, வைகுண்ட ஏகாதசி போன்ற திருநாள்களைக் கொண்டாடத் தயங்கும் தீவிர சைவர்கள் தீபாவளியையும் ஒதுக்கியிருப்பார்கள் அல்லவா?
நவராத்திரியைத் தவிர்த்து இஇந்தியர்கள் அனைவராலுமே மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் திருநாள் திபாவளிதான்.
வடநாட்டில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஹோலிபண்டிகையைத் தென்னாட்டில் கொண்டாடுவதில்லை.
தமிழகத்தின் பொங்கல் கேரளத்தில் அவ்வளவாகக் கொண்டாடப்படுவதில்லை. கேரளத்தின் ஓணம் மற்ற இஇடங்களில் கிடையாது. ஆனால் தீபாவளியை இந்தியர்கள் அனைவருமே கொண்டடுகிறார்கள். ஆனால் ஒவ்வொரு இஇடத்தில் ஒவ்வொரு காரணத்தைக் கூறிக்கொள்கிறார்கள்.
தீபாவளிக் கதை.....1
பூமாதேவியோட மகன்தான் நரகாசுரன்! நரகாசுரன் பிரம்மாகிட்ட ஒரு வரம் வாங்கினான். தன்னோட தாயைத் தவிர வேறு எவராலும் தனக்கு சாவு...மரணம் சம்பவிக்கக் கூடாதுன்னு பிரம்மனிடம் வரம் வாங்கியிருந்தான். வரத்தை வாங்கீட்டோம்ங்கிற தைரியத்துல அவனைவிட பலம் வாய்ந்த தேவர்களையும், நாட்டு மக்களை பல துன்பங்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளாக்கினான்.
எப்டிப்பட்ட தொல்லைன்னா இராத்திரியில யாரும் வீட்டுல வெளக்கேத்தக் கூடாதுன்னு உத்தரவு போட்டான். வெளிச்சத்தை வெறுக்கும் அரக்கன் அவன்! இருளை நேசிக்கும் இஇரக்கமில்லாதவன். வெளிச்சவிளக்குகளை வீட்டில் வைத்தவர்களின் தலைகளைக் கொய்தான், கொடும்பாதகன் நரகாசுரன்!
நரகாசுரனின் கொடுமைகளைத் தாங்க முடியாத மக்கள், பகவான் கிருஷ்ணரிடம் முறையிட்டனர். கிருஷ்ணரும் நரகாசுரனை அழிக்கிறேன் என்று சொல்லி மக்களுக்கு ஆறுதல் சொன்னார். மக்களுக்கு வாக்குறுதி கொடுத்துட்டு கம்முன்னு சும்மா இருக்க முடியுமா? பூமாதேவியின் அவதாரமான சத்தியபாமாவுடன் நரகாசுரனை எதிர்த்துச் சண்டை போடுறதுன்னு முடிவு செஞ்சார் பகவான் கிருஷ்ணர். சண்டை ஆரம்பிச்சுச்சு. போர் நடக்கும்போது நரகாசுரன் விட்ட அம்பு கிருஷ்ணருக்கு மயக்கமடையிர நிலைக்கு ஆளாயிட்டார். பூமா தேவி இதைப் பாத்தாங்க. அவங்க மனசு பொறுக்கல. மிகுந்த கோபத்தோட சத்தியபாமா, நரகாசுரனோட சண்டை போட்டாங்க. கொடியவன் நரகாசுரனை வெட்டி வீழ்த்தினாங்க, சத்தியபாமா. நரகாசுரன் சாகிறதுக்கு முன்னாடி தன் தாயிடம் ஒரு விண்ணப்பம் செஞ்சான்.
எனக்குச் சாவு வரதுக்கு காரணம், நான் எல்லோரையும் வெளக்கேத்தக் கூடாதுன்னு சொன்னதுதான்! அதனால நான் இஇறக்கிற இஇந்த நாளை மக்கள் வெளக்கேத்தி சந்தாஷமாக் கொண்டாட நீங்கதான் ஏற்பாடு செய்யணும்ன்னு கேட்டான்.
பூமாதேவி நரகாசுரனின் கோரிக்கையை நிறைவேத்துறதா ஒத்துக்கிட்டாங்க. மக்களே, அரக்கன் ஒழிஞ்சான் அப்டீங்கிற நிம்மதியோட வீட்டுவீட்டுக்கு வெளக்குகளா ஏத்தி தங்களோட சந்தோஷத்தை வெளிப்படுத்துனாங்க. வீட்டுல யாரும் வெளக்கு ஏத்தக் கூடாதுன்னு நரகாசுரன் போட்ட தடை நீங்கிடிச்சு இல்லையா? அதனால நரகாசுரன் என்ற அந்தக் கொடிய அரக்கன் இஇறந்து அழிந்து ஒழிந்த அந் நாளை தீபங்கள் ஏற்றி வெளிச்சத் திருவிழாவாக.... தீபத்திருவிழாவாக.... தீபாவளியாக எல்லோராலும் கொண்டாடப்படுகிறது. தவறு செய்பவர் தன் மகனேயானாலும் அவன் மகன் என்று பாராமல் தண்டிக்கவேண்டும் என்பதுதான் இஇதில் பொதிந்திருக்கும் உண்மை!
சத்தியபாமையென்ற பெண்ணின் உதவியின்றியே கிருஷ்ணரால் நரகாசுரனை வென்றிருக்க முடியும். பின் ஏன் அப்பெண்ணின் துணையை அவன் நாடினான்?
இதில் வாழ்க்கையின் ஒரு முக்கியத் தத்துவம் அடங்கியுள்ளது. இஇன்ப, துன்பம்
நிறைந்த வாழ்க்கையில் மனைவியென்ற ஒரு துணையின்றி வெற்றி பெறயியலாது என்பதை உணர்த்துவதற்காகவே சத்தியபாமையென்ற பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. கணவனும், மனைவியும் இஇணைந்து வாழ்வதே உண்மையான வாழ்க்கையாகும்.
தீபாவளி கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் இஇன்னும் பல கூறப்படுகின்றன.
தீபாவளிக் கதை.....2
இராமயணக் காவியத் தலைவர் இராமர் வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பிய நாள் என்றும், திருமால் வாமன அவதாரமெடுத்து மகாபலியை வதம் செய்த நாள் என்றும், சிலர் அதுதான் புதிய ஆண்டும் என்றும் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.திருமுருக கிருபானந்த வாரியார் தீபாவளிக்குச் சொல்ற காரணத்தையும் நாம் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது!?
தீபாவளிக் கதை.....3 கிருபானந்த வாரியார் சுவாமிகள் சொல்றார்.....
" தீபாவளி என்னும் நன்னாளைப் பொன்னாளாக யாண்டுங் கொண்டாடுகிறார்கள். ஆனால் அதன் உண்மையறிந்தவர்கள் ஒரு சிலரேயாவார்கள்.
பெரும்பாலோர், நரகாசுரனைக் கண்ணபிரான் சங்கரித்தார். அந்த அரக்கனை அழித்த நாளே தீபாவளி என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். நரகாசுரனைச் சங்கரித்த நாள் அதுவாக இருக்கட்டும். ஆனால் கேவலம் ஒரு கொடியவனைக் கொன்ற நாளுக்கு ஒரு கொண்டாட்டம் நிகழ்வது யாண்டும் எக்காலத்தும் இருந்ததில்லை.
அப்படியிருக்குமாயின், இஇரணியைனக் கொன்ற நாள், இஇராவணனைக் கொன்ற நாள், கம்சனைக் கொன்ற நாள், இஇடும்பனைப் - பகனைக் கொன்ற நாள், துரியோதனனைக் கொன்ற நாள், அவ்வாறே அந்த காசுரன் சரந்தராசுரன், இரண்யாட்சன், திருவணாவர்த்தன் இஇப்படிப் புகழ் படைத்த அரக்கர்கள் ஒவ்வொருவரையுங் கொன்ற நாட்களையெல்லாம் கொண்டாடுவதாயின், ஆயுளே அதற்குச் சரியாகி விடும். ஆகவே
நரகாசுரனைக் கொன்றதற்காகத் தீபாவளி ஏற்பட்டதன்று,"
தீபம் -விளக்கு, ஆவளி- வரிசைதீபத்தை வரிசையாக வைத்துச் சிவபெருமானை வழிபடுவதற்கு உரிய நாள் தீபாவளி என உணர்க. தீபமங்கள ஜோதியாக விளங்கும் சிவபெருமானை, நிரம்பவும் விளக்கேற்றி வணங்கினார்கள் நமது முன்னோர்கள்.திருக்கார்த்திகையில் விளக்கேற்றி வணங்குகின்றார்களன்றோ?" விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்என்பது ஞான சம்பந்தர் திருவாக்கு. " என்று குறிப்பிடுகிறார் வாரியார் சுவாமிகள்!
தீபாவளிக் கதை.....4
சீக்கியர்கள் தீபாவளி கொண்டாடுற..... தீபாவளிக்கு சொல்ற காரணம் வேற. சீக்கிய மதத்தின் ஆறாவது குருவான குரு கோவிந்த சிங் குவாலியர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் சிறையிலிருந்து விடுபட்ட நாளைத்தான் தீபாவளியாகக் கொண்டாடுவதாச் சொல்றாங்க!
ஓ! இஇதான் தீபாவளி பிறந்த கதையா? அப்டீன்னு நீங்க கேட்டா, இஇல்லை...
இது மாதிரி நெறைய தீபாவளிக் கதைகள் இஇருக்கு... விரிவாச் சொல்லாட்டாலும் கொஞ்சம் சுருக்கமாவே சொல்றேனே!?
தீபாவளிக் கதை.....5
ராமர் 14 வருஷ வனவாசத்துக்குப் பிறகு மனைவி சீதையோடவும் தன்னோட அருமைத் தம்பி இலக்குமணனோடும் அயோத்தி திரும்புறாங்க. கம்பர் அந்த அயோத்தி நகரம் எப்டி விழாக்கோலம் கொண்டிருந்துச்சுன்னு அழகாச் சொல்லுவார்.
ஆக விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ராமர் வனவாசம் முடிந்து அயோத்திக்குத் திரும்பிய அந்த மகோன்னத நாளைத்தான் தீபாவளித் திருநாளாகக் கொண்டாடுவதாகச் சொல்வாரும் உண்டு!
தீபாவளிக் கதை.....6
இன்னும் சிலர் ராமன், அரக்கன் ராவணனை அழித்தொழித்த நாளைத்தான் அயோத்தி நகர மக்கள் வீடுகளில் எண்ணெய் விளக்குகள் ஏற்றிக் கொண்டாடிய அந்த நாளே தீபாவளி என்று சொல்வாரும் உண்டு.
தீபாவளிக் கதை.....7
மகாபலி என்ற அரக்கனை அழிக்க மகாவிஷ்ணு ஒரு தந்திரம் செய்தார். அவர் வாமன வடிவமெடுத்து மகாபலியிடம் வந்தார். தமக்கு மூன்றடி நிலம் வேண்டும் என்று மகாபலியிடம் கேட்டார் மகாவிஷ்ணு.
மகாபலியோ, மகாவிஷ்ணுவின் சூழ்ச்சியை அறியாமல் வாமன உருவிலிருந்த மகாவிஷ்ணுவிற்கு மூன்று அடி நிலம் தருவதாக வாக்களித்தான். ஆனால், மகாவிஷ்ணுவோமுதல் அடியை மண்ணிலும்,
இஇரண்டாவது அடியை விண்ணிலும்
வைத்துவிட்டு மூன்றாவது அடியை எங்கே வைப்பது என்று மகாபலியிடம் கேட்கிறார். வாக்குத் தவறக்கூடாது என்பதில் உறுதியோடிருக்கும் மகாபலி,
மூன்றாவது அடியை தனது தலையில் வைக்குமாறு சொல்ல....... மகாவிஷ்ணுவும் அவனது தலையில் மூன்றாவது அடியை வைத்து அழுத்திக் கொன்றார்.
மகாபலி அரக்கன் அழிந்த நாளே தீபாவளித் திருநாள் என்று கருதுவாரும் உண்டு!
தீபாவளிக் கதை.....8
மகாவிஷ்ணு நான்காவது அவதாரமான நரசிம்ம அவதாரம் எடுத்து இஇரணியனை வதம் செய்து உலகத்தில் உண்மையை நிலை நாட்டிய நாளே தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது என்று சொல்வாரும் உண்டு !
தீபாவளிக் கதை.....9
துர்கா தேவி மகிசாசுரனை வதம் செய்தழித்த நன்னாளே தீபாவளித் திருநாள் என்று சொல்வதும் உண்டு. சொல்லப்படுகிற அனைத்துக் கதைகளிலும் உள்ள ஒரே ஒற்றுமை விஷ்ணுவின் அவதாரம் இஇருப்பதுதான் !
தீபாவளிக் கதையுடன் ஒன்றை ஒப்பிட்டுப்பார்க்கவும் வேண்டும். நன்மையின் வெற்றி. தீமையின் அழிவு என்பதைத்தான் கிருஷ்ண பகவான் நரகாசுரன் கதை கூறுகிறது என்கின்றனர்.
தீபாவளிக்கு முன்னரே வரும்நவராத்திரியின்போதும், பின்னர் வரும் கந்த சஷ்டியின்போதும் இஇந்தக் கருத்துத்தான் வலியுறுத்தப்படுகிறது.இந்த இஇரண்டு விழாக்களிலும் அரக்கர்கள் அழிக்கப்படுகின்றனர். நன்மை வெற்றிகொள்கிறது, தீமை அழிகிறது. இந்தக் கருத்து பண்டைய இஇந்துக்களை ஈர்த்திருக்கவேண்டும்.
ஆகவேதான் ஒன்றன்பின்னர் ஒன்றாக வரும் பண்டிகைகளில் அதை வலியுறுத்தியுள்ளனர் போலும். மேற்குறிப்பிட்ட எந்த ஒரு காரணத்திற்காகவும் தீபாவளி கொண்டாடப்பட்டாலும் அதனை சமூக ரீதியாகப்பார்ததால் என்ன? மனிதன் மகிழ்ந்திருப்பது அவனின் இஇயல்பு. குடும்பத்துடனும் நண்பர்களுடனும் மற்ற இஇனத்தவருடனும், சமயத்தினருடனும் மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு நாள் தீபாவளி. . !
தீபாவளிக் கதை.....10
இத்தனை கதையிருக்க உவமைக் கவிஞர் சுரதாவோ தீபாவளிக்குச் சொல்லும் கவிதைவிளக்கமோ வேறுமாதிரி உள்ளது. ஐப்பசியில் தேய் நிலாவின் சதுர்த்தசியி லே எள் செடியின் மூலம் கிடைத்த எள்ளைக் கொண்டுதயாரித்த எள் நெய்...அதாவது நல்லெண்ணெய் கண்டு பிடிப்பை பள்ளிநாட்டையாண்ட பருபன் என்ற மன்னனுக்குச் சொன்னார்களாம்!
நல்லெண்ணெய் ''நேத்திரத்தின் ரோகத்தை நீக்கும்; மேக நீரிருந்தால், எலும்புருக்கி நோயி ருந்தால்மாத்திரை ஏன்? இஇந்த எண்ணெயைத் தேய்த்துக் கொண்டால் போதும், நோய்கள் அகலும்; புதுப் பொலிவுபெறலாம் என்றும் இந்த எண்ணெயில் பலகாரங்கள் செய்தும் சாப்பிடலாம்; அதன் சுவையோ தனி என்றும்சொல்ல அதையும் மன்னன் சோதித்து அவ்வளவும் உண்மையென்று அறிந்த மன்னன்,
அந்த மன்னவர்தலைவன் மகிழ்ந்து அதன் சிறப்பைக் குடி மக்கள் உணர தீபவதி நதிக்கரையில் மக்களுடன் மக்களாக நீராடி மகிழ்ந்தாராம். அந்த இனிய நாளை ஆண்டுதோறும் தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்துஅதிலேயே பட்சணங்கள் செய்தும், அன்று புத்தாடை அணிந்தும் மகிழ்ச்சியாக இருங்கள் என்று அந்த பருபன்மன்னன் தன் குடிமக்களுக்கு உத்திரவிட்டானாம். அந்த நாள்தான் தீபாவளி என்கிறார் உவமைக் கவிஞர் சுரதா!
இத்தனை கதையில் எந்தக் கதை மெய்? எந்தக் கதை பொய்? எதை நம்புவது, எங்களைக் குழப்பிவிட்டீர்களேஎன்று என்னை யாரும் திட்ட வேண்டாம் ;-) இத்தனையிலும் மேலோங்கி நிற்பது நரகாசுரன் கதைதான்என்றாலும் வாரியார் சுவாமிகள் சொன்னதை நாம் கணக்கில் கொள்ளலாமே!?
அக்பர் காலத்தில்.....!
விநாயகர் சதுர்த்தி மற்றும் முஸ்லிம் பண்டிகைக் கால நேரங்களில் இஇன்றைக்கு தலைவர்கள் இஇந்து - முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்திப் பேசவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் மாமன்னன் அக்பர் சக்கரவர்த்தி ஆண்ட காலத்தில் தீபாவளிப் பண்டிகையில் கலந்துகொண்டு கொண்டாடி மகிழ்ந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் வளமையோடு சொல்கிறது. தீபாவளித் திரு நாளில் கோவில்களில் தீபங்களை ஏற்றிவைக்க மான்யமாக பல லட்ச ரூபாய்களை பேருள்ளத்தோடு வழங்கியுள்ள செய்தியை அறிந்து மகிழ்கிறோம்.
உலகெங்கும்....!
உலகெங்கும் தீபாவளி போன்று தீபங்கள் ஏற்றி விளக்கு வரிசைகள் வைத்து, பட்டாசு வெடித்து கொண்டாடும் பண்டிகைகளும் உண்டு. சீனாவில் " நஹீம் - ஹீபர் " என்றும்
ஜப்பானில் " டோரா நாகாஷி " என்றும், பர்மாவில் அதாவது இன்றைய மியான்மரில் " தாங்கீஜீ " என்றும்,
ஸ்வீடனில் " லூசியா " என்ற விழாவும்,
இஇங்கிலாந்தில் " கைபாக்ஸ் " என்ற விழாவும் தீபாவளி போலவே கொண்டாடப்படும் பண்டிகைகளாகும்.
பட்டாசு வெடிச்சு.....!
தீபாவளி என்றால் பட்டாசு இஇல்லாத தீபாவளியா? காசைக் கரியாக்கும் விஷயம் என்றாலும் அந்தப் பட்டாசுகள் கருக்கப்பட்டால் தான் லட்சக்கணக்கான பட்டாசுத் தொழிலாளர்களின் இஇல்லங்களில் வெளிச்சம் எரியும் ..... அடுப்பு புகையும் என்கிற நிலையையும் இஇந்தத் தருணத்தில் எண்ணிப் பார்க்கத்தான் வேண்டும்.
தங்கள் வயிற்றுப் பாட்டிற்காக பள்ளி வாழ்க்கையைத் தொலைத்து பட்டாசுத் தொழிற்சாலைகளில் தங்களைப் புதைத்துக்கொள்ளும் பிஞ்சுக் கரங்களின் உழைப்பு அந்தப் பட்டாசுகளில் உறைந்து கிடக்கும் உண்மையை எத்தனை பேர்கள் அறிவார்கள்?
இஇந்தியாவின் குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசி நகரில் மட்டும் சுமார் 360 கோடி ரூபாய் மதிப்புள்ள 50,000 டன்கள் எடையுள்ள பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவில் கேரள மாநிலம் எர்ணாகுளத்திலும், மத்தியப்பிரதேசமான குவாலியர், இஇந்தூரிலும் பட்டாசுத் தொழிற்சாலைகள் இஇயங்கி வருகின்றன. இஇந்தியாவில் நூறு 150 வகையான பட்டாசுகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.
ஆனால் சீனாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாட்டாசு வகைகள் தயாரிக்கப்படுகின்றன.இத்தாலி, பிரான்சு, பெல்ஜியம், கனடா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் சிறுவர் சிறுமியர்க்கு பட்டாசு விற்பனை செய்யப்படுவதில்லை.
தீபாவளிப் பண்டிகையின் பிறப்பிடமான இஇந்தியாவில் செய்யாத சிறப்பை சிங்கப்பூர் செய்திருக்கிறது. ஆம் !தீபாவளிப் பண்டிகையைச் சிறப்பித்துத் தபால் தலை வெளியிட்ட நாடு சிங்கப்பூர் மட்டும்தான்.
அதுமட்டுமல்ல. ஒரு மாதத்திற்கு இஇங்குள்ள சிராங்கூன் ரோடு அதாவது குட்டி இஇந்தியா- ஒளி வெள்ளத்தில் மிதக்கும். தீபாவளி பற்றிய பல கதைகளை விவரித்து குட்டி இஇந்தியாவில் உள்ள கண்காட்சியில் தட்டிகளில் எழுதிவைப்பது வழக்கம். சிங்கப்பூரில் இஇந்திய வம்சாவளியினர் பல பாகங்கிளிலிருந்தும் வந்தவர்கள் வாழ்கின்றனர். ஆகவே எல்லாவிதக் கதைகளையும் அங்கு வைப்பது ஒரு மரபாக உள்ளது.
புத்தாண்டு, குடியரசு தினம் என சிறப்புமிக்க நாட்களில் வான வேடிக்கை மூலம் வானத்தில் வண்ண வண்ணக் கோலமிட்டும் கூடியிருப்போரையும் தொலைக்காட்சியில் பார்ப்போரையும் ஏற்பாட்டாளர்கள் பரவசப்படுத்துவதில்லையா? அதைப் போலத்தான் பட்டாசு வெடித்தும் மத்தாப்பு கொளுத்தியும் மக்கள் மகிழ்கின்றனர். ஆனால் அவை மற்றவர்களுக்குத் தொல்லை தரும் வகையில் அமையக் கூடாது. தீப விளக்குகளின் திருவிழாவாம்தீபாவளித் திருநாள்!உங்கள் உள்ளங்களில்அந்தத் தீபங்களின் ஒளிநிரம்பட்டும்!பூக்கும் அன்பால் உங்கள் நல்இதயம் நிரம்பி வழியட்டும்!
இந்த நன்னாளில் எல்லோரும் இன்புற்றிருக்கஎல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து அமரிக்க தமிழ் வானொலியாம் மெரினா மூலம் வாழ்த்துவதில்மகிழ்வெய்துகிறேன்.ஆல்பர்ட், அமெரிக்கா.

சங்கமம் வாழ்த்துகிறது!************************************************************
இந்து வேத சாஸ்திரங்களில் மிகவும் பழமையானது ¡¢க் வேதம். துலாம் மாத கிருஷ்ண பண் சதுர்த்தசியின் பெருமையை இந்த வேதம் மிகச் சிறப்பாக எடுத்தியம்புகிறது. இப்பூவுலகில் உஷத் என்ற தேவதை சூ¡¢ய உதயத்திலிருந்து ஒன்றரை மணி நேரத்திற்கு முன்னர் உலா வருவதாகவும், இறைவனால் அனுப்பப்பட்ட இந்த தேவதை மனிதனின் நல்வாழ்விற்காக ஒவ்வொரு வீட்டின் முன்பும் நின்று செல்வதாகக் கூறப்பட்டுள்ளது. உஷத் தேவதையின் உலாவிற்கு முன்னர் இந்துப் பெண்கள் அதிகாலையில் துயில் எழுந்து தூய ஆடைகளை அணிந்து அலங்கார சகிதமாய் தனது வீட்டு முற்றத்தில் குளிர்ந்த நீரைத் தெளித்து கோலமிட்டு உஷத் தேவைதையை வரவேற்று மகிழ்ச்சிப்படுத்தினால் சகல செல்வங்களையும் அவள் அளிப்பாள் என நம்பப்படுகிறது. தீபாவளியன்று இன்னொரு ஆச்சர்யமும் நடக்குமென வேத சாஸ்திரம் கூறுகிறது. அன்று அதிகாலை சேமித்து வைக்கப்படும் தண்ணீர் கூட சற்று சூடாகவும் வெதுவெதுப்பாக இருப்பதாகவும் உஷத் தேவதையின் வருகையால்தான் அவ்வாறு உள்ளதாகவும் அந்த வெதுவெதுப்பான புனித நீ¡¢ல் ஸ்நானம் செய்வோர் கங்கை நதியில் ஸ்நானம் செய்வதற்கு ஒப்பான புண்ணியத்தைப் பெறுகிறார்கள் எனவும் நம்பப்படுகிறது. அன்று ஓசோன் மண்டலத்தின் அடர்த்தி கூட சற்று அதிகமாகவே இருப்பதாக விஞ்ஞான ரீதியான கருத்தினை விஞ்ஞானிகள் தொ¢விக்கின்றனர். (நிலாச்சாரல்)
<வெட்டு> தீபம் -விளக்கு, ஆவளி- வரிசைதீபத்தை வரிசையாக வைத்துச் சிவபெருமானை வழிபடுவதற்கு உரிய நாள் தீபாவளி என உணர்க. தீபமங்கள ஜோதியாக விளங்கும் சிவபெருமானை, நிரம்பவும் விளக்கேற்றி வணங்கினார்கள் நமது முன்னோர்கள்.திருக்கார்த்திகையில் விளக்கேற்றி வணங்குகின்றார்களன்றோ?விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்என்பது ஞான சம்பந்தர் திருவாக்கு. "என்று குறிப்பிடுகிறார். ''எல்லாப் பண்டிகையுமே, நமக்கு சந்தோஷம் தரத்தான்! ஆனா இலக்கியம் சம்பந்தமா ஏதாவது நல்ல நிகழ்ச்சி நடந்தா அந்தச் சமயத்துல வர்ற பண்டிகை எனக்கு ரெட்டிப்பு சந்தோஷம் தரும் என்று சொல்லிச் சிரித்தார் அந்த காந்தியவாதி.
ஆனால், பல புனித பண்டிகைகளும் அவற்றின் உன்னத நோக்கங்களும் இன்று மக்களால் புறக்கணிக்கப்பட்டுவிட்டன. எண்ணை தேய்த்துக்கொள்வது, புத்தாடை அணிவது, விருந்துண்பது, வெடிகள் வெடிப்பது, புதுப்படங்கள் பார்ப்பது ஆகியவைதான் தீபாவளி பண்டிகையென வழக்கில் வந்துவிட்டது. அதன் புனித தன்மையை அனைவரும் மறந்துவிட்டனர்.
கருணையே உருவானவள் அன்னை கங்கை நதியாவாள். அவதாரப் புருஷரான ஸ்ரீ ஆதி சங்கரர் கங்கையைப் பற்றி கூறியுள்ளதை கவனிப்போம்.
''பிறவியில் ஒருமுறையேனும் கங்கையை இக்கண்களினால் காணாமல் செல்கின்றேனே என மனம் வருந்தி உயிர்நீக்கும் ஜீவனை கருணையுடன் உடனடியாக முக்தியளிக்கும் என் தாயான கங்கையை நமஸ்கரிக்கிறேன்''.
அத்தகைய கங்கை தீபாவளி திருநாளன்று அனைத்து நீரிலும் இருக்கிறாள் என நமது பண்டைய நூல்கள் அறுதியிட்டு கூறுகின்றனர். ஆதலால், தீபாவளியன்று கங்கையை பக்தியுடன் நினைத்து, நீராடி வீட்டிலுள்ள பெரியோர்களை வணங்கி, அவர்கள் ஆசியைப் பெற்று, மறைந்த பித்ருக்களை பூஜித்து, அதன்பின்பு பண்டிகையை கொண்டாடுவதே தீபாவளி அனுஷ்டிக்கும் உண்மையான முறையாகும். அதனால், குடும்பம் செழித்து வளரும்.
சாக்தஸ்ரீ டாக்டர் எஸ். ஜெயபாரதி (மயில் தீபாவளி சிறப்பு மலர் 1971)
இந்துக்கள் இவ்வுலகின் எப்பகுதியில் வாழ்ந்தாலும் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் மிகச் சிறப்பாகக் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.
தீபாவளியை ஏன் கொண்டாடுகிறார்கள் என்பதற்கு ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு காரணத்தைக் கூறுகிறார்கள். நரகாசுரனைச் சத்தியபாமா வதைத்த கதைதான் பெருமளவு கூறப்படும் காரணமாக விளங்குகிறது. இராமர் காட்டுக்குச் சென்று பதினான்கு ஆண்டுகள் கழித்து நாடு திரும்பிய நாளாகவும் வட நாட்டில் பல பகுதிகளில் கூறுவார்கள். திருமகளுக்குரிய பண்டிகையாகச் சில இடங்களில் தீபாவளியைக் கொண்டாடுவார்கள். சில இனமக்களுக்குப் புத்தாண்டின் தொடக்கமாகத் தீபாவளி விளங்குகின்றது.
தீபாவளி கொண்டாடப்படும் அடிப்படையான காரணத்தைப் பல ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்துள்ளனர். அந்த ஆராய்ச்சிகளின் விளைவாகச் சில கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்கள். அவற்றுள் ஒரு கருத்து கவனத்தைக் கவரக் கூடியதாக அமைந்துள்ளது. அதைப் பற்றிச் சற்று சிந்திப்போம்.
இந்தியாவில் ஒரு காலத்தில் மிகவும் அதிகமாகப் பரவியிருந்தது சமண சமயம். குறிப்பாகத் தமிழ் நாட்டில் 6-ஆம், 7-ஆம் நூற்றாண்டுகளில் மிகவும் செல்வாக்கோடு இருந்தது. அதனுடைய ஆதிக்கத்தை எப்படி அப்பரும், திருஞானசம்பந்தரும் உடைத்தார்கள் என்பது இந்து சமய வரலாற்றில் ஓர் ஏடாகும்.
சமண சமயம் 24 மகான்களால் வளர்க்கப்பட்டது. அவர்களைத் தீர்த்தங்கரர்கள் என்று அழைப்பர். அவர்களில் 24-ஆவது தீர்த்தங்கரர் வர்த்தமான மகாவீரர். இவர் ஓர் அரச குடும்மத்தில் வைசாலி என்னும் நாட்டில் கி.மு. 599-ல் பிறந்தார். புத்தருக்கு இவர் உறவினர். மகாவீரரின் பெருமுயற்சியால் சமணம் வேகமாகப் பரவியது. கி.மு. 327-ல் அலெக்ஸாந்தர் வடமேற்கு இந்தியாவக் கைப்பற்றி விட்டுத் திரும்பிச் செல்லும்போது தம்முடன் ஒரு சமணத் துறவியையும் மத்திய கிழக்கிற்கு அழைத்துச் சென்றார். அவ்வளவிற்குச் செல்வாக்குடன் சமணம் திகழ்ந்தது.
பிரபஞ்சஞானம், விஞ்ஞானம், வானநூல், பௌதீகம், கணிதம், சித்தாந்தம், புராணம், தத்துவ சாஸ்த்திரம் முதலிய பல துறைகளிலும் பேரறிஞராக மகாவீரர் விளங்கினார். அஹிம்சையை வலியுறுத்தி அதை இன்றளவும் இந்தியர்களிடையே வேரூன்றச் செய்த பெருமையில் பெருமளவு மகாவீரரையே சாரும். மகாத்மா காந்தியின் கொள்கைகளில் மகாவீரரின் கோட்பாடுகளின் சாயலைக் காணலாம். மகாத்மா கந்தியின் மூதாதையர் சமணர்களாக இருந்து இந்துக்களாக மாறியவர்கள். இந்து சமயத்தில் அன்று நிலவிய சடங்கு சம்பிரதாயங்களின் ஆதிக்கம், பிராமணர்களின் மேலாண்மை, ஊழல்கள் முதலியவைகளைக் கண்டித்தவர் மகாவீரர். கொலை, பொய், பேராசை, காமம், பொருள்களின் மேல் இச்சை முதலிய ஐந்து விஷயங்களை ஒதுக்குமாறு கூறினார். இந்தக் கோட்பாட்டிற்குத்தான் பஞ்சசீலம் என்று பெயர். இவற்றையெல்லாம் வென்றவர் என்றதால் அவரை ஜினர் என்று அழைத்தார்கள். அப்பெயரிலிருந்து தோன்றியதுதான் சமண சமயத்தைக் குறிக்கக் கூடிய ஜைனம் என்னும் சொல்.
மகாவீரர் தம்முடைய கடைசிக் காலத்தில் பீகாரில் உள்ள பாவாபுரி என்னும் நகரத்தில் தங்கி மக்களுக்கு அறிவுரை வழங்கி வந்தார். ஒரு நாள் இரவு முழுவதும் சொற்பொழிவு நடைபெற்றது. விடியும் சமயத்தில் அனைவரும் இருந்த இடத்திலேயே உறங்கி விட்டனர். மகாவீரர் தாம் வீற்றிருந்த ஆசனத்தில் இருந்தபடியே வீடுபேறடைந்தார். பொழுது விடிந்து எல்லோரும் விழித்தெழுந்து பார்த்த போது மகாவீரர் வீடுபேறடந்திருப்பதை அறிந்தனர். அவ்வூர் அரசன் மற்ற அரசர்களை வரவழைத்து அவர்களோடு ஆலோசனை செய்து உலகிற்கு ஞான ஒளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவு கூர்ந்து வழிபடும் பொருட்டு அவர் வீடுபேறெய்திய நாளில் வீடுதோறும் விளக்குகளை ஏற்றி வைத்து விழாக்கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான். தீபம் என்றால் விளக்கு. ஆவலி என்றால் வரிசை. ஆகவே இவ்விழா தீபாவளி என்ற பெயரைப் பெற்றது. மகாவீரர் வீடுபேறடைந்த விடியற்கலையிலே இது கொண்டாடப்பட்டது.
சமண சமயத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் சமணர்கள் பெருவாரியாக இந்து மதத்தில் சேர்ந்தனர். இவ்வாறு அவர்கள் சேர்ந்தபோது அவர்கள் வணங்கிய தெய்வங்களில் சில, கொண்டாடிய விழாக்களில் சில, கடைப்பிடித்த கொட்பாடுகளில் சிலவற்றை இந்து சமயத்திற்குக் கொணர்ந்தனர். ஏற்கனவே இந்துக்களாயிருந்தவர்களும் இதனை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டனர். முடிவில் இந்துக்கள் அனைவரும் ஏகோபித்து ஒருமைப்பாட்டுடன் கடைப்பிடிக்கலாயினர். இந்தியாவிலும் பிற இடங்களிலும் நிலவி வந்த பல வழக்கங்களையும் வழிபாட்டுமுறைகளையும் இந்து சமயம் தனக்குள் சங்கமித்துக் கொள்வது வரலாற்றில் அடிக்கடி நடைபெற்று வந்ததொரு உண்மை. இது இந்து சமயத்தின் பெருமையையும் பெருந்தன்மையையும் காட்டும். இந்த விஷயத்தைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள விரும்புபவர்கள் ஆராய்ச்சியாளரும் பேரறிஞருமான மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய 'சமணமும் தமிழும்' மற்றும் 'பௌத்தமும் தமிழும்' என்னும் நூல்களைப் படிக்கலாம்.
இன்றளவும் சமணர்கள் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தீபாவளியினுடைய மூலம் எதுவாக இருந்தாலும் இப்போது எல்லா இந்துக்களின் பொதுப் பண்டிகையாக அது விளங்கி வருகிறது.
பஞ்சாங்கங்களில் தீபாவளியன்று காலையில் 'சந்திர தரிசனம்' என்றோ 'சந்திரோதயத்தின் போது கங்கா ஸ்நானம் செய்ய உத்தமம்' என்றோ காணப்படும். 'சந்திர தரிசனம்' என்றால் என்ன? ஐப்பசி மாதத்தில் தேய்ப்பிறை பதினான்காம் நாளாகிய சதுர்த்தசியன்று சூரிய உதயத்திற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பாக பிறைச் சந்திரன் மெல்லியதொரு கீற்றாகத் தோன்றும். இது கிழக்கில் அடிவானத்தில் தெரியும். சூரியன் உதயமாகிவரும் நேரத்தில் சூரிய ஒளியில் அது மங்கிப்போய் கண்ணுக்குப் புலப்பட மாட்டாது. ஆனாலும் கூட சூரிய உதயத்திற்கு முன்பு கவனமாகத் தேடிப்பார்த்தால் சுமார் 20 நிமிடங்களுக்கு சந்திரனைக் காண முடியும். மேகமூட்டமோ, மூடுபனியோ இல்லாது இருக்கவேண்டும். இந்த நேரத்தில் பூமியில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் ஆகாச கங்கை ஆவிர்பவிக்கும். ஆகவே அந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். ஆகையால்தான் தீபாவளியன்று விடியுமுன் குளிப்பதை 'கங்காஸ்நானம்' என்று கூறுகிறார்கள். கங்காஸ்நானம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்று ஆன்றேர் கூறுவார்கள்.
அதிகாலையில் அவரவர் குடும்பத்துக்குரிய குலதெய்வத்திற்குப் பலகாரங்களால் ஆகிய படையல் பொட்டு தங்கள் தங்கள் வழக்கப்படி வழிபாடு செய்வார்கள். ஆனால் தீபாவளி படாடோபம் ஆடம்பரம் முதலியவைகளை காட்டும் ஒரு பண்டிகையாக ஆகி விட்டது.
தீபாவளியன்று மாமிச உணவை நீக்கவேண்டும். ஆனால் நடைமுறையில் அன்றுதான் மிக அதிகமாக மாமிச உணவு புழங்குகின்றது. மற்றவர்களுக்கு உண்பதற்குத் தந்து உபசரித்தாலும் கூடத் தங்கள் தங்கள் அளவில் கட்டுப்பாட்டோடு இருக்கலாமே.
மதுபானங்களைக் கண்டிப்பாக அருந்துதல் தவிர்க்கப்பட வேண்டும்.
மற்ற இனத்தவரை உபசரித்தல் இன்றியமையாதது. ஆனால் நம்வரையில் தீபாவளியின் புனிதத்தையும் காக்க வேண்டும் அல்லவா? ஆகவே மற்றவர்களுக்கு உரிய உபசரிப்புக்கும் மரியாதைக்கும் குறைவில்லாமல் அதே சமயத்தில் நம் பண்டிகையின் புனிதமும் கெட்டு விடாமல் நாம் நடக்கலாமே.
தீபாவளிக்காக நன்கு செலவு செய்கிறோம். அந்தச் செலவுகளோடு இன்னொரு செலவையும் சேர்த்துக் கொள்ளலாம்.
இந்துக்களில் பலர் ஏழ்மையில் இருக்கிறார்கள். சமூக நலனபிவிருத்தி இலாகாவிலிருந்து உதவித் தொகை பெறுபவர்கள் பலர் இருக்கிறார்கள். குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்கள் பலர். இவர்கள் வீடுகளில் விளக்கெரியாது. பல தினுசான பலகாரங்களை இவர்கள் செய்து உண்ண முடியாது. இவர்களோ இவர்களின் குழந்தைகளோ புத்தாடை உடுத்த முடியாது.
ஆகவே தீபாவளிக்கு முன் ஏதாவது ஓர் ஏழைக் குடும்பத்திற்கு அல்லது தனி நபருக்காவது இயன்ற வரை உதவி செய்தல் இன்றியமையாதது. அக்குடும்பத்தின் குழந்தைகளுக்குப் புத்தாடை வழங்குங்கள். ஆனால் ஒன்று, அவர்களைப் பிச்சைக்காரர்கள் போல் நடத்தாமல் கௌரவம் கொடுத்து அன்பை வழங்குங்கள்.
இதைத்தான் நரகாசுரனோ அல்லது மகாவீரரோ மிகவும் விரும்பியிருப்பார்கள். நான்(டாக்டர் ஜெயபாரதி) இதைத்தான் செய்து வருகிறேன்.

திருவுக்குரிய திருநாள்
டாக்டர் சாக்தஸ்ரீ எஸ். ஜெயபாரதி (1972 மயில் தீபாவளி சிறப்பிதழ்)
சென்ற ஆண்டு மயில் தீபாவளி இதழில் தீபாவளியைப் பற்றி எழுதச் சொல்லியிருந்தார்கள். அப்போது எழுதிய கட்டுரையில் தீபாவளிக்கும் சமண சமயத்துக்கும் இடையே இருந்த தொடர்பைப் பற்றி எழுதியிருந்தேன்.
நரகாசுரனைச் சத்தியபாமா வதம் புரிந்ததைத் தீபாவளியாகக் கொண்டாடுவதாகத் தமிழர்கள் நம்புகிறார்கள். இதற்குரிய கதை 'காளிகா புராண'த்திலும் வேறு சில புராணங்களிலும் உபகதையாகக் காணப்படுகிறது. கிருஷ்ணன் சத்தியபாமா சம்பந்தப்பட்ட விழாவாக முழுக்க முழுக்க இருந்தால் இது வைணவ விழாவாகக் கருதப்பட்டிருக்கும். ராமநவமி, கோகுலாஷ்டமி, வைகுண்ட ஏகாதசி போன்ற திருநாள்களைக் கொண்டாடத் தயங்கும் தீவிர சைவர்கள் தீபாவளியையும் ஒதுக்கியிருப்பார்கள் அல்லவா?
நவராத்திரியைத் தவிர்த்து இந்தியர்கள் அனைவராலுமே மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் திருநாள் திபாவளிதான். வடநாட்டில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஹோலிபண்டிகையைத் தென்னாட்டில் கொண்டாடுவதில்லை. தமிழகத்தின் பொங்கல் கேரளத்தில் அவ்வளவாகக் கொண்டாடப்படுவதில்லை. கேரளத்தின் ஓணம் மற்ற இடங்களில் கிடையாது. ஆனால் தீபாவளியை இந்தியர்கள் அனைவருமே கொண்டடுகிறார்கள். ஆனால் ஒவ்வொர் இடத்தில் ஒவ்வொரு காரணத்தைக் கூறிக்கொள்கிறார்கள்.
மகாலட்சுமி பாற்கடலில் தோன்றியதை நினைவுறும் வண்ணம் இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகளில் வசிப்பாவர்கள் கொண்டாடுகிறார்கள்.
ஒவ்வொரு மன்வந்தரத்திலும் ஒவ்வொரு இடத்தில் மஹாலட்சுமி அவதரிப்பாள். அடாடா, மன்வந்தரம் என்றால் என்ன என்று சொல்லாமல் விட்டு விட்டேனே! நாம் இருக்கும் கால கட்டத்தைக் கலியுகம் என்று அழைப்பார்கள். கலியுகம் 4 லட்சத்து 32 ஆயிரம்(432,000) ஆண்டுகளைக் கொண்டது. இதற்கு முன் கிருதம், திருதம், துவாபரம் என்று மூன்று யுகங்கள் இருந்தன. இவை நான்கினையும் சதுர்யுகம் என்று கூறுவார்கள். மொத்தம் 43 லட்சத்து 20 ஆயிரம் (4,320,000) ஆண்டுகள் இதில் இருக்கும். இந்தச் சதுர்யுகங்கள் மீண்டும் அடுத்தடுத்துத் தோன்றிக் கொண்டேயிருக்கும்.
இவ்வாறு 72 சதுர்யுகங்களைக் கொண்டது ஒரு மன்வந்தரம். 31 கோடி 10 லட்சத்து 40 ஆயிரம் (311,040,000) ஆண்டுகள் இருக்கும்.
இவ்வாறு 14 மன்வந்தரங்கள் தோன்றி மறைந்தால் அது ஒரு கல்ப காலமாகும். இது பிரம்மாவுக்கு ஒரு பகல். இதன் பின் ஒரு கல்ப காலத்துக்கு ஒரு மகா பிரளயகாலம் நிலவும். இது பிரம்மாவின் இரவு. இவ்வாறு நூறாண்டுகள் கொண்டதே பிரம்மாவின் ஆயுள். (கால்குலேட்டர் வத்திருக்கிறீர்களா? அப்படியானால் நீங்களே கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள்.) ( 870,912,000,000 என்று வருமோ! மா. அங்கையா )
நாம் தற்சமயம் வாழ்ந்து கொண்டிருக்கும் மன்வந்தரத்தை வைவஸ்வத மன்வந்தரம் என்றழைப்பார்கள். விவஸ்வான் என்னும் பெயர் கொணட சூரியதேவனின் மகனாகிய வைவஸ்வதன் என்னும் மனுவின் வழித்தோன்றல்கள் தான் இந்த மன்வந்தரத்தில் மனித இனமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களாகிய நாம். ஆம். சூரியனிலிருந்து தோன்றியவர்கள்தாம் நாம். அப்படித்தானே விஞ்ஞான ஆராய்ச்சியும் கூடக் கூறுகிறது?
இதற்கு முன்னுள்ள மன்வந்தரங்களில் தாமரை, வில்வம், பூமி போன்ற இடங்களில் மகாலட்சுமி தொன்றினாள். இந்த மன்வந்தரத்தில் பாற்கடலில் தோன்றினாள்.
தூர்வாசர் என்னும் கோபக்கார முனிவரின் சாபத்தினால் தேவேந்திர னிடமிருந்து லட்சுமி நீங்கினாள். அதனால் அவனுடைய செல்வமும் மற்றவர்களின் செல்வமும் அறவே மறைந்தன. ஆகவே உலகெங்கும் சிறப்புக் குன்றியது. மீண்டும் லட்சுமியத் தோன்றச் செய்ய தேவர்கள் ஆலோசித்தனர். பாற்கடலில்தான் ஸ்ரீதேவி தோன்றுவாள் என்பதைக் கண்டறிந்த தேவர்கள் பாற்கடலைக் கடைந்தனர்.மந்திர மலை என்பதனை மத்தாகவும் வாசுகி என்னும் மகாநாகத்தைக் கயுறாகவும் வத்துக் கடைந்தனர். கனத்தால் மலை கடலில் அமுங்கியது. ஆமை வடிவெடுத்து மஹாவிஷ்ணு கீழிருந்து மலையை முத்டுகால் தாங்கி நிலைநிறுத்தினார். கடலிலிருந்து முதலில் தோன்றியது ஆலகால விஷம். அதனை சிவன் விழுங்கித் தொண்டையில் அடக்கி அழகாக திருநீலகண்டனாக விளங்கினார்.
அதன் பின்னர் ஜேஷ்டை என்னும் மூத்த தேவி தோன்றினாள். இவளுக்குப் பின்னால் ஸ்ரீதேவி எனப்படும் ஆதிலட்சுமி தோன்றினாள். அதன் பிறகு உச்சைசிரவஸ், அமிர்தம் போன்றவை தன்வந்திரியுடன் தோன்றின. ஆதிலட்சுமி விஷ்ணுவை அடைந்தாள். அவள் அஷ்டலட்சுமியாகவும் காட்சிதந்து பலவகையான செல்வங்களை உலகிற்கு வழங்கினாள்.
இதை முன்னிட்டு தீபத்தை ஏற்றி வைத்து லட்சுமியின் வருகையைக் கொண்டாடினார்கள்.
தீபாவளிக்கு முன்னால் உள்ள மூன்று நாள்களுக்குப் பாதாளலோகத்திலிருந்து பூமிக்கு வருகை புரியும் அரக்கர்களும் தீய சக்திகளும் மஹாபலி என்னும் அசுர அரசனின் தலைமையில் பூமியில் ஆதிக்கம் செலுத்த முனைவார்கள். அப்போது லட்சுமியின் மூத்த சகோதரியாகிய ஜேஷ்டாதேவியின் ஆதிக்கமும் தோன்றும். அவர்களை லட்சுமியின் துணையோடு தீபங்களின் உதவியால் இருளகற்றி வாணங்கள், பட்டாசு, வெடிகள் முதலியவைகளைக் கொளுத்தி அந்தத் தீயசக்திகளை வெரட்டி அடிப்பார்கள். அலட்சுமியாகிய மூத்த தேவியின் ஆதிக்கமும் அகன்று விடும்.
மஹாபலியை மீண்டும் பாதாள லோகத்திற்கு அனுப்பிய பின் மகிழ்ச்சியாக இருந்து கொண்டாடுவார்கள்.
சூரியன் உதயமாவதற்கு முன்னர் பிறைச் சந்திரன் தோன்றும் வேளையில் பூமியில் உள்ள நீர்நிலைகளில் கங்காதேவி ஆவாஹனம் ஆவாள். அதே சமயத்தில் நல்லெண்ணெயில் மஹாலட்சுமியின் அம்சங்கள் தோன்றும். ஆகையால் அந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து கங்காஸ்னானம் செய்வார்கள்.
ஒரிஸா போன்ற இடங்களில் உள்ளவர்கள் வீட்டிற்கு வெளியில் சேர்த்து வத்திருக்கும் மாட்டுச் சாணக் குவியலை வணங்குவார்கள். வயலுக்கு எருவாகப் பயன்படுத்தும் மாட்டுச்சாண எருக்குவியல், சகதி போன்றவற்றில் லட்சுமி வாசம் செய்வதாக அக்கால மக்கள் நம்பினார்கள். இக்கருத்து வேதகாலத்திலேயே இருந்தது - லட்சுமியின் மானஸ புத்திரராகிய கர்தமர் என்னும் பிரஜாபதி சகதியில்தான் லட்சுமியின் நிழலில் தோன்றியதாகக் காணப்படுகிறது.
'கர்தமேன ப்ரஜாபூரா மயி சம்பவ கர்தம' என்ற ஸ்ரீசூக்தத்தின் வாசகத்தால் இதை அறியலாம். லட்சுமி உறையும் இடங்களில் தாமரையும் ஒன்று. லட்சுமிக்கேகூட 'கமலா', 'பத்மா' என்றெல்லாம் தாமரையைக் குறிக்கக் கூடிய பெயர்கள் உண்டு. தாமரையும் சகதியில் தானே தோன்றுகின்றது?
வண்டல், சேறு, சகதி, எருக்குவியல் போன்றவை விவசாயத்தின் ஆதாரமான விஷயங்கள். 'சோழநாடு சோறுடைத்து' என்று ஔவையார் பாடியதற்கு அடிப்படையாக அமைந்ததே காவிரியின் நீர்வளமும் அது கொண்டு வந்து சேர்க்கும் சகதியும்தானே?
ஸ்ரீசூக்தம் என்பது ஸ்ரீதேவிக்குரிய சிறந்த மந்திரநூல். அதர்வ வேதத்திலும் ரிக் வேதத்திலும் காணப்படுகிறது. 15 ஸ்லோகங்களைக் கொண்டது. ஆற்றல் மிகப் படைத்தது. அதன் பெயரைச் சொல்லியே பெரும் பணம் சம்பாதிப்பவர்கள் இருக்கின்றனர். அவ்வளவு ஆற்றல் படைத்தது!
தீபாவளியை விவசாயிகளைவிட வணிகர்களே மிகவும் செலவழித்து மிக மிக விமரிசையாகக் கொண்டாடினர். சமுதாயத்தில் அவர்களுக்கு இருந்த செல்வாக்கால்தான் தீபாவளிப் பண்டிகை இவ்வளவு பிரபலத்தை அடைந்துள்ளது.
மூதேவியின் தாக்கத்தைப் போக்கி ஸ்ரீதேவியின் செல்வாக்கைப் பெறுவதற்காக திருவின் திருநாளாகிய தீபாவளியின்போது நல்லதைச் சிந்தித்து நல்லதைச் செய்து திருவை வணங்கி வரவேற்போம்.

No comments: